வெள்ளம் பாதித்த நான்கு மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரண பொருட்களை கட்டணம் இல்லாமல் அனுப்ப தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
நெல்லை,தூத்துக்குடி,தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக இயல்பு விட அதிகமான மழைப்பொழிவு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. தற்போது வெள்ளம் பாதித்த பகுதிகளில் தண்ணீர் வடிந்து வருவதால் மக்கள் மின்சார இணைப்பு ,நெட்வொர்க் வசதியை திரும்ப பெற்றுள்ளனர். அவர்களுக்கு வேண்டிய உணவு, குடிநீர் ஆகிய அடிப்படை தேவைகள் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் மூலமாகவும் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும் அரசு விரைவு பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் நிவாரணப் பொருட்களை அனுப்புவதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரின் அறிவுறுத்தலின் படி இலவசமாக நிவாரண பொருட்கள் அனுப்பப்படுகிறது என அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார் . இதற்காக தமிழ்நாடு முழுவதும் அரசு விரைவு பேருந்துகளில் உள்ள சுமை பெட்டிகள் மூலம் அனுப்பவும் ஏற்பாடு செய்தார் பொதுமக்கள் தன்னார்வலர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.