ஆக்ஸ்போர்டு, யேல் உள்ளிட்ட வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை இந்தியாவில் திறக்க அரசு முயற்சி

January 7, 2023

ஆக்ஸ்போர்டு, ஸ்டான்போர்டு, யேல் உள்ளிட்ட வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை இந்தியாவில் திறக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இது தொடர்பான வரைவு மசோதாவை மக்களின் கருத்துக்கேட்புக்காக பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது. மக்களின் கருத்துக் கேட்புக்குப் பிறகு இம்மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. 2022-ம் ஆண்டின் உலகளாவிய போட்டித்திறன் குறியீட்டில் பட்டியலிடப்பட்ட 133 நாடுகளில் இந்தியா 101-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்திய மாணவர்களின் திறனை சர்வதேச தரத்துக்கு மாற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. ஏற்கெனவே […]

ஆக்ஸ்போர்டு, ஸ்டான்போர்டு, யேல் உள்ளிட்ட வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை இந்தியாவில் திறக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பான வரைவு மசோதாவை மக்களின் கருத்துக்கேட்புக்காக பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது. மக்களின் கருத்துக் கேட்புக்குப் பிறகு இம்மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. 2022-ம் ஆண்டின் உலகளாவிய போட்டித்திறன் குறியீட்டில் பட்டியலிடப்பட்ட 133 நாடுகளில் இந்தியா 101-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்திய மாணவர்களின் திறனை சர்வதேச தரத்துக்கு மாற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. ஏற்கெனவே சில வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், இந்திய கல்வி நிறுவனங்களுடன் கூட்டமைப்பு வைத்து இந்திய மாணவர்களுக்கு கல்வி வழங்கி வருகிறது.

மத்திய அரசின் தற்போதைய முடிவு, வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் கிளை திறக்க வழி செய்யும். வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களின் கிளைகள் இந்தியாவில் திறக்கப்பட்டால், குறைந்த செலவில் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu