புதிய திட்டத்தின் கீழ் புலம்பெயர் தொழிலாளர்களின் முழுமையான விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளது. இந்த முயற்சி, அவர்கள் வாழ்வாதாரம் மற்றும் நலனை பாதுகாப்பதற்கான முக்கியமான அடித்தளமாக இருக்கும்.
தமிழ்நாடு அரசு, மாநிலம் முழுவதும் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களை கணக்கெடுக்க தீர்மானித்துள்ளது. இதற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது. 38 மாவட்டங்களில் நடைபெறும் இந்த கணக்கெடுப்பின் மூலம், தற்போது சுமார் 35 லட்சம் தொழிலாளர்கள் பற்றிய துல்லியமான விவரங்கள் பதிவாக உள்ளன. தொழிலாளர்கள் வருகைக்கான காரணங்கள், அவர்கள் வசிக்கும் இடம், வாழ்க்கை நிலை, சுகாதார நிலை மற்றும் மேற்கொள்ளும் பணிகள் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளது. இந்த நடவடிக்கை, தொழிலாளர்களின் நலனுக்கான அரசின் திட்டங்களை மேம்படுத்த உதவும்.














