ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வரும் 27ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 18ந் தேதி வெளியானது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன. தேர்தலில் பொதுமக்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 4 நிலை கண்காணிப்பு குழு, 3 பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வரும் 27ம் தேதி கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தொகுதியில் வாக்காளர்களாக பதிவு செய்துள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் வரும் 27ம் தேதி ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்படுகிறது என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.