மணிப்பூர் அரசு ராகுல் காந்தி யாத்திரைக்கு நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளது.
ஜனவரி 14-ஆம் தேதி மணிப்பூரில் இருந்து இந்திய ஒற்றுமை நீதிக்கான யாத்திரையை காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தி தொடங்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் மணிப்பூர் அரசு பாதுகாப்பு காரணம் கருதி ராகுல் காந்தி யாத்திரைக்கு அனுமதி அளிக்காமல் தொடர்ந்து மறுத்து வந்தது. இந்நிலையில் மணிப்பூர் மாநில அரசு சில நிபந்தனைகளுடன் ராகுல் காந்திக்கு யாத்திரை மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது. அதில் இந்திய ஒற்றுமை நீதிக்கான யாத்திரை குறிப்பிட்ட பங்கேற்பாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும், பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை என தெரிவித்துள்ளது.