கிரெடிட் கார்டுகள் மூலம் நிறைவேற்றப்படும் பண பரிவர்த்தனைகள் மற்றும் வெளிநாட்டு பரிவர்த்தனைகள் மீது 20% டி சி எஸ் வரி விதிக்க திட்டமிடப்பட்டிருந்தது. வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் இந்த வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று, டிசிஎஸ் வரி விதிப்பு தேதி அக்டோபர் 1 ஆக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டிசிஎஸ் வரிவிதிப்புக்கு ஏற்பட்டுள்ள விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகளை கருத்தில் கொண்டு தேதி ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “இந்திய வங்கிகளுக்கு டிசிஎஸ் வரி தொடர்பான அம்சங்களை முழுமையாக நிறைவேற்றுவதற்கு கால அவகாசம் தேவை. அதனை கருத்தில் கொண்டு, டிசிஎஸ் வரி விதிப்பு அக்டோபர் 1 முதல் செயல்படுத்தப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.