திருவள்ளூரில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

திருவள்ளூரில் உள்ள அரச போக்குவரத்து கழக பணிமனை முன்பு அரசு போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். திருவள்ளூரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யு காஞ்சிபுரம் மண்டல துணைத் தலைவர் மாயக்கண்ணன் தலைமையில் காஞ்சிபுரம் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் திருவள்ளூர் முன்னாள் நகர மன்ற தலைவர் சுந்தர்ராஜன், சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டமானது […]

திருவள்ளூரில் உள்ள அரச போக்குவரத்து கழக பணிமனை முன்பு அரசு போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யு காஞ்சிபுரம் மண்டல துணைத் தலைவர் மாயக்கண்ணன் தலைமையில் காஞ்சிபுரம் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் திருவள்ளூர் முன்னாள் நகர மன்ற தலைவர் சுந்தர்ராஜன், சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டமானது ஊதிய பேச்சு வார்த்தையை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்கவும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பண பலன், போக்குவரத்துப்படி, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு, உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது. போராட்டத்தில் கோயம்பேடு, திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை ஆகிய இடங்களில் பணியாற்றும் போக்குவரத்து ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu