தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மாநில அளவிலான பெண் விவசாயிகள் தொழில்நுட்ப கருத்தரங்கம் வருகிற எட்டாம் தேதி நடைபெற உள்ளது.
தேனி மாவட்டம் காமாட்சிபுரம் சென்டர் வேளாண் அறிவியல் மையம் சார்பில் மாநில அளவிலான பெண் விவசாயிகள், பெண் முனைவோர்கள், மகளிர் சுய உதவி அமைப்புகள் உள்ளிட்ட தொழில்நுட்ப கருத்தரங்கம் எட்டாம் தேதி நடைபெறுகிறது. இக்கருத்தரங்கத்தில் பங்கு கொள்வதற்காக தமிழக கவர்னர் ஆர். என். ரவி சின்னமனூர் வருகை புரிய உள்ளார். இதற்காக அவர் விமான மூலம் மதுரை வந்து பின்னர் அங்கிருந்து கார் மூலம் சின்னமனூர் செல்கிறார். இந்த நிகழ்விற்கு கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமி, அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாரதி ஹரி சங்கர், ஹைதராபாத் வேளாண்மை தொழில்நுட்ப பயன்பாட்டு இயக்குனர் ஷேக் மீரா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மேலும் தேனி, அரியலூர் மற்றும் பெரியகுளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வேளாண் அதிகாரிகளும் இவ்விழாவில் கலந்து கொள்கின்றனர்.