தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக இன்று கோவைக்கு வருகிறார்.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக இன்று கோவைக்கு வருகிறார். நாளை காலை 11 மணிக்கு கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி உரையாற்றுகிறார். 2 நாள் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு கவர்னர் ஆர்.என்.ரவி நாளை மாலை 3 மணிக்கு கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
கவர்னரின் வருகையை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கவர்னர் செல்லும் சாலைகள் மற்றும் அரசு விருந்தினர் மாளிகை பகுதி உள்பட முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.