கவர்னர் மாளிகையில் நாளை கொண்டாடப்பட இருந்த கிறிஸ்துமஸ் விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
கவர்னர் மாளிகையில் நாளை கிறிஸ்துமஸ் விழா கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் நாளை நடைபெற இருந்த கிறிஸ்துமஸ் விழா ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.