2023 ஆம் நிதி ஆண்டுக்கான பி எப் வட்டி 8.15% ஆக உயர்வு - மத்திய அரசு ஒப்புதல்

2023 ஆம் நிதி ஆண்டுக்கான பி எப் வட்டி விகிதத்தை 8.15% ஆக உயர்த்த மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 8.15% வட்டி விகிதம் வழங்குவதற்கு ஒப்புதல் கிடைத்ததை அடுத்து, வரும் ஆகஸ்ட் மாதம் முதல் பணியாளர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஓய்வூதிய நிதி அமைப்பான இபிஎப்ஓ சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. முன்னதாக, கடந்த 2022 ஆம் தேதி ஆண்டில் பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கு […]

2023 ஆம் நிதி ஆண்டுக்கான பி எப் வட்டி விகிதத்தை 8.15% ஆக உயர்த்த மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 8.15% வட்டி விகிதம் வழங்குவதற்கு ஒப்புதல் கிடைத்ததை அடுத்து, வரும் ஆகஸ்ட் மாதம் முதல் பணியாளர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஓய்வூதிய நிதி அமைப்பான இபிஎப்ஓ சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. முன்னதாக, கடந்த 2022 ஆம் தேதி ஆண்டில் பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 8.1% ஆக வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. இது பி எப் வரலாற்றில் மிகவும் குறைவான வட்டி விகிதமாக அறியப்பட்டது. தற்போது, இது 0.05% உயர்த்தப்பட்டுள்ளது. வரும் 2024 ஆம் ஆண்டு, நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வட்டி விகித உயர்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu