சென்னை தலைமைச் செயலகத்தில் இரண்டாவது நாளாக மாவட்ட கலெக்டர்கள் மாநாடு நடைபெற்றது.தமிழ்நாட்டில் மகளிர் இடையே கலைஞர் உரிமை திட்டம் மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது.மேலும் பள்ளி மாணவர்களின் காலை உணவு திட்டத்தில் தொடர்ந்து தனி கவனம் செலுத்தப்பட்டு அவற்றை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை அரசு ஏற்றுக்கொள்ளாது. இதற்காக அரசு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஒரு சில மாவட்டங்களில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் தவிர மற்ற நாட்களில் கலெக்டர்களை சந்திக்காமல் இருப்பது சரியல்ல. இதற்காக மக்கள் கலெக்டர்களை சந்திப்பதற்கு பார்வையாளர் நேரம் ஒதுக்கப்படுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். மேலும் தற்போது அரசு பள்ளி மாணவர் விடுதிகளில் தங்கி பயலும் மாணவ மாணவிகளுக்கு மாதம் தோறும் உணவுக்காக வழங்கப்பட்டு வரும் தொகை ஆயிரத்தில் இருந்து 1400 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 844 மாணவ மாணவிகள் பயன்பெறுவார்கள். மேலும் இதனால் அரசிற்கு கூடுதலாக ரூபாய் 68.771 செலவு ஏற்படும் என்று பல திட்டங்களை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறினார்.