வரும் டிசம்பர் 31, 2023 வரை, வெங்காய ஏற்றுமதிக்கு 40% வரி விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கிலும், உள்ளூர் தேவைகள் பாதிக்கப்படாமல் தடுக்கவும், இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது. மத்திய அரசின் நிதி அமைச்சகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
வரும் செப்டம்பர் மாதத்தில், வெங்காய விலைகள் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஏற்றுமதி வரி விதிப்பு நடவடிக்கை கொண்டுவரப்பட்டுள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அத்துடன், வெங்காய தேவையை நிறைவேற்றும் பொருட்டு, 3 லட்சம் டன் வெங்காயத்தை இருப்பு வைக்க திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டில், வெறும் 2.51 லட்சம் டன் வெங்காயம் மட்டுமே இருப்பு வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.