மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம், இணைய வர்த்தகத் தளங்களுக்கான புதிய விதிமுறைகளை வகுத்து வருகிறது. குறிப்பாக, இணைய வர்த்தகத் தளங்கள் மீதான பிடி இறுக்கப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, இணைய வர்த்தகத் தளங்களின் பதில்களை அடிப்படையாகக் கொண்டு, புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
" விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை இணைக்கும் ஒரு மத்திய தளமாக, அமேசான், பிளிப்கார்ட், ஸ்னாப்சாட் போன்ற இணைய வர்த்தகத் தளங்கள் செயல்படுகின்றன. இதில் நுகர்வோர் ஏமாற்றப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே, விற்பனையாளரின் தவறான பொருட்கள் மற்றும் நடவடிக்கைகளுக்கு, இணைய வர்த்தகத் தளங்கள் பொறுப்பேற்கும் படியான விதிமுறைகள் தீட்டப்பட உள்ளன. " இவ்வாறு Meity அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.