இந்திய அரசு தன்னிடம் உள்ள 5% இந்திய ரயில்வே துறையின் பங்குகளை இன்றும் நாளையும் சலுகை விலையில் விற்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம், சுமார் 4,00,00,000 ஐஆர்சிடிசி பங்குகள், ஒரு பங்கு 680 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளன. புதன்கிழமை வர்த்தக நாளின் இறுதியில், ஐஆர்சிடிசி பங்கு விலை 734.90 ஆக இருந்தது. எனவே, ஒவ்வொரு பங்கும், 7% க்கும் அதிகமான சலுகை விலையில் விற்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை அன்று மட்டும், சில்லறை முதலீட்டாளர்கள் ஐஆர்சிடிசி பங்குகளை வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழன் அன்று, சில்லறை முதலீட்டாளர்களுக்கு பங்குகள் விற்கப்படமாட்டாது. குறைந்தபட்சம் 25% பங்குகள் மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 10% மட்டுமே சில்லறை முதலீட்டாளர்களுக்கு விற்கப்பட உள்ளது.