குடியரசு தினவிழாவை முன்னிட்டு தமிழ்நாட்டின் அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் குடியரசு தினவிழா நாளை கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கவர்னர் பங்கேற்று தேசிய கொடியை ஏற்றிவைத்து, முப்படைகளின் அணிவகுப்பை ஏற்பார். இந்த நிகழ்ச்சியானது ஆண்டுதோறும் மெரினா கடற்கரையில் காந்தி சிலை முன்பாக நடைபெறும். ஆனால், தற்போது அங்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால், இந்தாண்டு குடியரசு தினவிழா கொண்டாட்டம் காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சிகளிலும் நாளை கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ளன.