ஆகஸ்ட் 15ஆம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது.
இது தொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் பொன்னையா அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், சுதந்திர தினத்தன்று காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். மக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் இடம், நேரத்தை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும், இந்த கூட்டத்தின் போது வரி செலுத்தும் சேவை, கட்டிட அனுமதி, தூய்மையான குடிநீர் வினியோகம், இணைய வழி மனைப்பிரிவு, சுய சான்றிதழ் அடிப்படையில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு உடனடி பதிவின் மூலம் அனுமதி வழங்குதல் போன்றவை ஆலோசிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.