விநாயகர் சதுர்த்தி பண்டிகை முடிவடைந்த நிலையில் சென்னையில் 1519 சிலைகள் நாளை ஊர்வலமாக எடுத்து செல்லபடுகிறது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலகாலமாக கொண்டாடப்பட்டது. இதில் 1519 பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் சென்னையில் மட்டும் வைக்கப்பட்டது. இந்த சிலைகளை கரைக்க குறிப்பிட்ட கடற்கரை பகுதிகளில் மட்டும் போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். அசம்பாவிதம், சேதம் எதும் நடைபெறாமல் இருப்பதற்காக பாதுகாப்பு பணியில் 16 ஆயிரத்து 500 போலீசார், 2000 ஊர்க்காவல் படை வீரர்கள் என மொத்தம் 18,500 பேர் ஈடுபட்டுள்ளனர். சிலைகளை கரைக்க ராட்சத கிரேண்கள் பயன்படுத்தப்பட உள்ளன. கட்டுப்பாடுகளை மீறுவோர் மற்றும் பொதுமக்களுக்கு குந்தகம் ஏற்படுத்துபவர் மீது சட்டப்படி நடவடிக்கை விடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.