கடந்த ஜூன் மாதத்தில், இந்தியாவின் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வரி வசூல் 1.74 லட்சம் கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் மாதாந்திர ஜிஎஸ்டி வரி வசூல் கடந்த ஜூன் மாதத்தில் 8% உயர்வை பதிவு செய்துள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டில் இதுவரை வசூல் செய்யப்பட்ட ஜிஎஸ்டி வருவாய் 5.57 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது. இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இனிமேல் ஜிஎஸ்டி வரி வசூல் அறிக்கை ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படாது. “ஜிஎஸ்டி வரி வசூல் ஒரு வெற்றிகரமான கட்டத்தை அடைந்துள்ளது. குறிப்பிட்ட இடைவெளியில் இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். ஆனால், மாதாந்திர அறிக்கை வெளியிடப்படுவது தான் நிறுத்தப்படுகிறது” என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.