ஜிஎஸ்டி வரி வசூல் ஏப்ரல் மாதத்தில் ரூபாய் 2.10 லட்சம் கோடி வசூலித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் 12.4 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஏப்ரல் மாதத்தில் 2.10 லட்சம் கோடி என்ற புதிய உச்சத்தை ஜிஎஸ்டி வரி வசூல் பெற்றுள்ளது. மேலும் இதற்கு உள்நாட்டு வர்த்தகம் அதிகரிப்பே காரணம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் வரி வசூல் 12. 210 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த 2023 ஏப்ரல் மாதத்தில் ஒப்பீடுகளில் ஆறு சதவிகிதம் அதிகரித்துள்ளது.