ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் துணிகளின் விலை உயர்வு. மேலும் தண்ணீர் கேன், சைக்கிள் மீதான வரிகளை குறைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான 55-வது ஜிஎஸ்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது, இதில் பல்வேறு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறித்து ஆலோசனைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் உள்ள முக்கிய பரிந்துரைகள்:
பாப் கார்னுக்கு 5% வரி, பெயர் பொறிக்கப்பட்ட பாக்கெட்டுக்கு 12% வரி, கேரமல் பாப்கார்ன்க்கு 18% வரி.
1000 ரூபாய்க்கு மேல் விலை கொண்ட துணிகளுக்கான வரி 12% ஆக உயர்வு.
20 லிட்டர் தண்ணீர் கேனுக்கு 5% வரி.
10,000 ரூபாய்க்கு குறைவான சைக்கிளுக்கு 5% வரி.
ஆர்டர் செய்து வாங்கப்படும் உணவுகளுக்கு சர்வீஸ் சார்ஜ் மீதான வரி குறைப்பது ஒத்திவைக்கப்பட்டது.
15,000 ரூபாய்க்கு மேலான ஷூக்களுக்கான வரி 28% ஆக உயர்வு.