தெலுங்கானா மாநில அரசு சார்பில், ஹைதராபாத்தில் நடத்தப்பட்ட மின்சார வாகன கண்காட்சியில் உலகின் அதிவேக மின்சாரக் கார் அறிமுகம் செய்யப்பட்டது.
GT Battista என்று பெயரிடப்பட்டுள்ள மின்சாரக் கார், மஹிந்திரா நிறுவனத்திற்கு சொந்தமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், இதனை வடிவமைத்து தயாரித்தது இத்தாலிய சொகுசு கார் நிறுவனமான Automobili Pininfarina ஆகும். இந்த கார் 120 KWh பேட்டரி திறன் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு முறை சார்ஜ் செய்தால் 476 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிடி பட்டிஸ்டா மின்சாரக் கார் முழுக்க முழுக்க கார்பன் பொருளாலான வெளிப்பக்கத்தை கொண்டுள்ளது. மேலும், 1.86 வினாடிகளில் 100 கிலோ மீட்டர் வரை வேகமெடுக்கும் எனவும், 4.75 வினாடிகளில் 200 கிலோமீட்டர் வரை வேகம் எடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.