பந்துவீச்சில் தாமதம் ஏற்பட்டதற்காக, ராஜஸ்தான் அணித் தலைவர் சஞ்சு சாம்சனுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது
அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் 23-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை 58 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 6 விக்கெட்டுக்கு 217 ரன்கள் எடுத்தது. சாய் சுதர்சன் 82 ரன்கள் எடுத்தார். பதிலுக்கு ராஜஸ்தான் அணி 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பந்துவீச்சில் தாமதம் ஏற்பட்டதற்காக, ராஜஸ்தான் அணித் தலைவர் சஞ்சு சாம்சனுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கு முன், சென்னை அணிக்கு எதிராகவும் விதிமீறல் நிகழ்ந்துள்ளது. அதோடு, மற்ற வீரர்கள் போட்டி கட்டணத்தில் 25% அபராதம் செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.