ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட துப்பாக்கிச்சண்டையில் இராணுவ கேப்டன் உயிரிழந்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் இன்று காலை பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.இந்த சண்டையில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ கேப்டன் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை சுட்டுக்கொன்ற 4 பயங்கரவாதிகளை தேடி பாதுகாப்பு படை வீரர்கள் மூலம் தீவிரமான தேடுதல் பணிகள் நடைபெறுகின்றன.