மெக்ஸிகோ மதுபான விடுதியில் துப்பாக்கி சூடு நடந்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.
மெக்சிகோவின் தபஸ்கோ மாகாணம், வில்லாஹெர்மோசா பகுதியில் உள்ள ஒரு மதுபான விடுதியில் நேற்று பகலில், வழக்கம்போல் சிலர் மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது, ஒரு மர்ம நபர் திடீரென விடுதிக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினான். இந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்துக்குப் பின்னர், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. சம்பவத்தை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.