கவுகாத்தி சர்வதேச விமான நிலையத்தில் கனமழையின் காரணமாக விமான நிலைய மேற்கூரை இடைந்து விழுந்ததால் விமான சேவை பாதிக்கப்பட்டது.
அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் கனமழை மற்றும் சூறைக்காற்று காரணமாக கவுகாத்தி சர்வதேச விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் விமான நிலையத்தின் ஒரு பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் பயணிகள் இதனால் அவதி அடைந்தனர். இருப்பினும் இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என் தெரிவிக்கப்பட்டுள்ளது.