வெனிசுலா உடனான எல்லை அருகே கயானாவின் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.
வெனிசுலா உடனான கயானா நாட்டின் எல்லைக்கு அருகே ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று ஏழு பேரை ஏற்றி சென்றது. அது நேற்று முன்தினம் மாயமானது. அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. பின்பு தெரியவந்தது. இது பெல் 402 ரக ஹெலிகாப்டர் ஆகும். இதில் ஐந்து பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிபர் அலி தெரிவித்துள்ளார்.
வெனிசுலா எல்லையில் இருந்து 30 மைல் தூரத்தில் இந்த ராணுவ ஹெலிகாப்டர் சிக்னலை இழந்தது. இந்த விபத்தில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிர் பிழைத்துள்ளனர். மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. மோசமான வானிலை காரணமாக அவ்வப்போது தேடுதல் பணி நிறுத்தப்படுகிறது.