தென் அமெரிக்க நாடான கயானாவில், பள்ளியில் நடந்த தீ விபத்து ஒன்றில், குறைந்தபட்சம் 20 பேர் பலியாகி உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளிவந்துள்ளது. மேலும், இந்த விபத்தில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கயனாவில் உள்ள Mahdia Secondary School பள்ளி வளாகத்தில், இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் ஆகியோர் பாதிப்படைந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. மேலும், அந்த பகுதியில் அவசர சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், 7 மாணவர்கள் விரைவு சிகிச்சைக்காக தலைநகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.