போர்ட்-ஓ-பிரின்ஸ் அருகே உள்ள பெடன் வெலி பகுதியில், போலீசாரும் ஆயுத கும்பலும் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். இந்த மோதலில் ஆயுத கும்பலின் 28 உறுப்பினர்கள் உயிரிழந்தனர்.
2021-ம் ஆண்டு, கரீபியன் தீவு நாடான ஹைதியில் அதிபர் ஜோவெனல் மொயஸ் படுகொலை செய்யப்பட்டபோது, அந்நாட்டின் அரசியல் நிலை பாதிக்கப்பட்டது. இதன் பின்னர், ஆயுத கும்பல்களின் ஆதிக்கம் அதிகரித்தது. அவற்றின் வன்முறை பல மடங்கு வலுப்பெற்றது. தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸ் உள்பட பல பகுதிகளில் ஆயுத கும்பல்கள் தங்களது கட்டுப்பாட்டை நிலைநாட்டினன. சமீபத்தில், போர்ட்-ஓ-பிரின்ஸ் அருகே உள்ள பெடன் வெலி பகுதியில், போலீசாரும் ஆயுத கும்பலும் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். இந்த மோதலில் ஆயுத கும்பலின் 28 உறுப்பினர்கள் உயிரிழந்தனர்.