தமிழ்நாடு ஹஜ் மாநில குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அரசு மானியம் வழங்கி வருகிறது.
தமிழ்நாட்டுப் பயணிகள் சென்னையிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள இந்த ஆண்டு முதல் சென்னை புறப்பாடு தளமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் பயணம் மேற்கொண்டு தங்களது கடமையை நிறைவேற்றி மீண்டும் திரும்ப உள்ளனர்.
முதல்முறையாக ஹஜ் பயணம் மேற்கொள்வோர்களுக்கு தமிழ்நாடு மாநில ஹஜ் குழுமம் மூலம், தமிழக அரசு மானியம் வழங்க அரசு ஏற்பாடு செய்திருக்கிறது. இதற்காக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் தகுதியுள்ள ஒருவருக்கு ரூபாய் 25,070 வீதம், 3987 பயன்களுக்கு இம்மானியம் வழங்கப்பட இருக்கின்றது. அதில் 5 பயணிகளுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் ரூ.25070 க்கான காசோலைகளை ஹஜ் மானிய தொகையாக வழங்கி உள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், ஹஜ் குழுவின் செயலாளர் மற்றும் பல அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.