காசாவில் போர் நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகளின் விடுவிப்பு போன்றவற்றிற்கான உடன்படிக்கைக்கு விரைவில் ஹமாஸ் பதில் அளிக்கும் என்று அதன் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கு மாதங்களாக காசா போர் நீடித்து வருகிறது. இதுவரை 27,000க்கும் அதிகமான மக்கள் பலியாகினர். நூற்றுக்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் பிணைக்கைதிகளாக உள்ளனர். இந்நிலையில் ஹமாஸ் தலைவர் ஒசாமா பிணைக்கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் போரை நிறுத்த வேண்டும் என்றும், இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்களை விடுவிக்க வேண்டும் என்றும் இதுதான் ஒரே வழி எனவும் தெரிவித்துள்ளார். அதோடு இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீன தலைவர்கள் இருவரின் பெயரையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் மர்வான் வர்கபுடி மற்றும் அகமத் சதாத் என்பவர்கள் ஆவர். அதோடு இஸ்ரேல் சிறைகளில் உள்ள அனைவரையும் விடுவிக்க போதுமான பிணைக்கைதிகள் ஹமாசிடம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இஸ்ரேல் போரை நிறுத்துவது மட்டுமல்லாமல் காசாவை மறுசீரமைக்கவும் பாடுபட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையேயான பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறுவதாக கத்தார் தெரிவித்துள்ளது.