ஹமாஸ்-இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் 3 பணய கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் தாக்குதலில் 1,139 பேர் உயிரிழந்தனர். இதில், 251 இஸ்ரேலியர்கள் பணயக் கைதிகளாக கடத்தப்பட்டனர். அதன் பிறகு, ஹமாஸ் மீது போர் அறிவித்துள்ள இஸ்ரேல், பல மாதங்கள் போர் நடத்திய பின்னர், 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஒப்புக்கொண்டது. இதில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இரு தரப்பும் கைதிகளை மாற்றிப் பெற ஒப்புக்கொண்டன.
இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் பிரகாரம், ஹமாஸ் தங்கள் பிடியில் உள்ள இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டிருந்தது. அதன்படி, 3 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளது. இந்த 3 பேர் லெய்ர் ஹோர்ன் (46), சாகுய் தெகெல் சென் (36), மற்றும் அலெக்சாண்டர் (சஷா) டிரௌபனவ் (29) ஆகியோர் ஆகின்றனர். இதன்போது, காசாவில் இன்னும் 73 இஸ்ரேலியர்கள் பணயக் கைதிகளாக உள்ளனர், இதில் 36 பேர் உயிரிழந்திருக்கலாம் என இஸ்ரேல் கணித்து உள்ளது.