காசாவில் நிரந்தர போர் நிறுத்தத்தை இஸ்ரேல் மேற்கொண்டால்தான் பிணைக் கைதிகளை விடுவிப்போம் என்று ஹமாஸ் அமைப்பு உறுதியாக கூறியுள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு கூறியுள்ளதாவது, இஸ்ரேலுடன் காசா போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். ஆனால் ஒரு சில பகுதிகளில் மட்டும் போர் நிறுத்தம் செய்து கொள்வதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இங்கு நிரந்தரமாக போரை நிறுத்தினால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துவோம். அப்போதுதான் எங்களிடம் உள்ள பிணைக் கைதிகளை விடுவிப்போம். இவ்வாறு அந்த அமைப்பு கூறியுள்ளது. இதுவரை சுமார் 21 ஆயிரம் பேர் இந்த போரில் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.