ஹம்தான் பல்லால் இஸ்ரேலிய ராணுவத்தால் கைது

May 27, 2025

பாலஸ்தீனிய ஆவணப்பட இயக்குநர் ஹம்தான் பல்லால் இஸ்ரேலிய ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார். ஆஸ்கார் விருது பெற்ற 'நோ அதர் லேண்ட்' ஆவணப்படத்தின் இணை இயக்குநர் ஹம்தான் பல்லால், மேற்கு கரையில் இஸ்ரேலிய குடியேறிகள் குழுவினரால் தாக்கப்பட்டு, பின்னர் இஸ்ரேலிய ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை 'நோ அதர் லேண்ட்' படத்தின் மற்றொரு இயக்குநர் யுவல் ஆபிரகாம் தனது சமூக ஊடகப் பதிவில் பகிர்ந்துள்ளார். பல்லாலுக்கு தலை மற்றும் வயிற்றில் காயம் ஏற்பட்டு இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் […]

பாலஸ்தீனிய ஆவணப்பட இயக்குநர் ஹம்தான் பல்லால் இஸ்ரேலிய ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார்.

ஆஸ்கார் விருது பெற்ற 'நோ அதர் லேண்ட்' ஆவணப்படத்தின் இணை இயக்குநர் ஹம்தான் பல்லால், மேற்கு கரையில் இஸ்ரேலிய குடியேறிகள் குழுவினரால் தாக்கப்பட்டு, பின்னர் இஸ்ரேலிய ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை 'நோ அதர் லேண்ட்' படத்தின் மற்றொரு இயக்குநர் யுவல் ஆபிரகாம் தனது சமூக ஊடகப் பதிவில் பகிர்ந்துள்ளார். பல்லாலுக்கு தலை மற்றும் வயிற்றில் காயம் ஏற்பட்டு இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும்போது, இஸ்ரேலிய ராணுவம் அதை தடைசெய்து, பல்லாலை கைது செய்தது. இந்த படம், பாலஸ்தீனிய கிராமங்கள் மீதான இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலையும் அதன் எதிர்ப்பு போராட்டத்தையும் சித்தரிக்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu