குரூப்-4 தேர்வு முடிவை வெளியிடக்கோரி டுவிட்டரில் ஹேஷ்டேக்

குரூப்-4 தேர்வு முடிவை வெளியிடக் கோரி தேர்வர்கள் டுவிட்டரில் ஹேஷ்டேக் செய்து வருகின்றனர். 397 கிராம நிர்வாக அலுவலர், 2 ஆயிரத்து 792 இள நிலை உதவியாளர், 34 வரித்தண்டலர், 509 நில அளவையர், 74 வரைவாளர், 1,901 தட்டச்சர், 784 சுருக்கெழுத்து தட்டச்சர் உள்பட குரூப்-4 பதவிகளில் வரும் 7 ஆயிரத்து 301 பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 22-ந்தேதி தேர்வு நடந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்வு முடிவு வெளியாகும் […]

குரூப்-4 தேர்வு முடிவை வெளியிடக் கோரி தேர்வர்கள் டுவிட்டரில் ஹேஷ்டேக் செய்து வருகின்றனர்.

397 கிராம நிர்வாக அலுவலர், 2 ஆயிரத்து 792 இள நிலை உதவியாளர், 34 வரித்தண்டலர், 509 நில அளவையர், 74 வரைவாளர், 1,901 தட்டச்சர், 784 சுருக்கெழுத்து தட்டச்சர் உள்பட குரூப்-4 பதவிகளில் வரும் 7 ஆயிரத்து 301 பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 22-ந்தேதி தேர்வு நடந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்வு முடிவு வெளியாகும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. அப்போதும் முடிவு வெளியிடப்படவில்லை. அதனைத் தொடர்ந்து தேர்வாணையம் 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட வாய்ப்பு இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்த அறிவிப்பின்படியும் கடந்த மாதத்தில் தேர்வு முடிவு வெளியாகவில்லை.

கடந்த மாதம் 14-ந்தேதி இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட அறிக்கையில் மார்ச் மாதத்தில் முடிவு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தேர்வு முடிவை வெளியிடக்கோரி தேர்வை எழுதிய தேர்வர்கள் டுவிட்டரில் ''வி வான்ட் குரூப்4 ரிசல்ட்'' என்பதை 'ஹேஷ்டேக்'காக 'டிரெண்டிங்' செய்து வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu