ஹெச்டிஎஃப்சி வங்கி தனது இரண்டாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஹெச்டிஎஃப்சி உடன் ஹெச்டிஎஃப்சி வங்கி இணைக்கப்பட்ட பிறகு வெளியாகும் முதல் நிதிநிலை அறிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.ஹெச்டிஎஃப்சி வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தனது வரலாற்றில் உச்சபட்ச வீட்டுக்கடன் வழங்கலை ஹெச்டிஎஃப்சி பதிவு செய்துள்ளது. கிட்டத்தட்ட 48000 கோடி மதிப்பில் வீட்டுக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.. ஒட்டுமொத்தமாக, வங்கியின் மதிப்பு 57.7% உயர்ந்து 23.54 லட்சம் கோடியாக உள்ளது. வங்கியின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் 10.5% அளவில் இருந்ததாக தெரிவித்துள்ளது. வங்கியின் வைப்புத் தொகை 21.73 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 29.9% உயர்வாகும்.