இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கி நிறுவனமான ஹெச்டிஎஃப்சி வங்கியின் நான்காம் காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வங்கியின் நிகர லாபம் 37.1% உயர்வு 16512 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. வங்கிக்கு வட்டி மூலமாக கிடைக்கும் வருவாய் 24.5% உயர்ந்து 29077 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், 2024 ஆம் நிதி ஆண்டுக்கான டிவிடெண்ட் ஒரு பங்குக்கு 19.5 ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் எச்டிஎப்சி வங்கியின் நிகர லாபம் 17622.38 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய காலாண்டை விட 2.11% உயர்வாகும். மேலும், ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், ஹெச்டிஎஃப்சி வங்கியின் நிகர வட்டி வரம்பு 3.44% ஆகவும் வாராக்கடன் 1.24% ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.