இன்றைய வர்த்தக நாளின் தொடக்கத்தில் எச்டிஎப்சி வங்கி நிறுவனத்தின் பங்குகள் ஒரு வருட உச்சத்தை பதிவு செய்தன. ஹெச்டிஎஃப்சி வங்கியின் ஒரு பங்கு மதிப்பு 1791.9 ரூபாய் அளவில் வர்த்தகமாகி வருகிறது.
ஹெச்டிஎஃப்சி வங்கி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக, MSCI குறியீட்டில் கணிசமான உயர்வை எச் டி எஃப் சி பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல பங்குச் சந்தை முகமை நிறுவனங்களும் இந்த கருத்தை தெரிவித்துள்ளன. கிட்டத்தட்ட 55% அளவுக்கு கீழ் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் பங்கு ஹெச் டி எப் சி வங்கியில் குறைந்துள்ளது. இதனால், எச்டிஎப்சி வங்கியின் MSCI நிரையில் 3.8% முதல் 7.2% அல்லது 7.5% அளவுக்கு மாற்றங்கள் இருக்கலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, 3.2 பில்லியன் முதல் 4 பில்லியன் டாலர்கள் வரை முதலீடுகள் ஈர்க்கப்படும் என கருதப்படுகிறது.