கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டு நிதிநிலை அறிக்கையை ஹெச்டிஎஃப்சி வங்கி நேற்று வெளியிட்டது. இதன் விளைவாக, இன்றைய வர்த்தகத்தில், எச்டிஎப்சி வங்கி பங்குகள் உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன.ஹெச்டிஎஃப்சி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகிய இரு நிறுவனங்கள் ஒன்றாக இணைக்கப்பட்ட பிறகு வெளிவரும் முதல் நிதிநிலை அறிக்கை இதுவாகும். அதன்படி, ஹெச்டிஎஃப்சி வங்கியின் நிகர லாபம் 15976 கோடி ரூபாயாக உள்ளது. மேலும், வங்கியின் தனிப்பட்ட வருவாய் 78406 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வங்கிக்கு வட்டி மூலம் கிடைக்கும் வருவாய் 3.4% உயர்வை பதிவு செய்துள்ளது. அதே வேளையில், வங்கியின் வாராக்கடன் 1.34% ஆக உள்ளது.