ரஷியாவின் அணு, உயிரியல் மற்றும் ரசாயன பாதுகாப்பு படைகளின் தலைவராக இருந்த லெப்டினண்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் மாஸ்கோ வெடிவிபத்தில் உயிரிழந்தார்.
ரஷியாவின் தலைநகரான மாஸ்கோவில் இன்று அதிகாலை, ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அருகே இரு சக்கர வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்தது. இதில், ரஷியாவின் அணு, உயிரியல் மற்றும் ரசாயன பாதுகாப்பு படைகளின் தலைவராக இருந்த லெப்டினண்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் உயிரிழந்ததாக ரஷியாவின் விசாரணைக்குழு அறிவித்துள்ளது. மேலும், இந்த வெடி விபத்தில் கிரில்லோவின் உதவியாளர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றவியல் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. கிரில்லோவின் மீது முன்பு ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் இருந்தன.