தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் காலதாமதத்தை தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தாமதமாக பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டும். உள்நோயாளிகள் பிரிவை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள், செவிலியர்கள் தாமதத்தை தவிர்க்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவர்கள், செவிலியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வர வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.