ஏப்ரல் 29-ம் தேதி ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு விசாரணை - குஜராத் நீதிமன்றம் 

April 27, 2023

ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு விசாரணை ஏப்ரல் 29-ம் தேதி நடைபெறும் என்று குஜராத் நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் சூரத் நீதிமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்தது. சூரத் நீதிமன்றத்தில், ராகுல் காந்தி தனக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நீக்க கோரியும், வழக்கு நடைபெறும் வரையில் […]

ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு விசாரணை ஏப்ரல் 29-ம் தேதி நடைபெறும் என்று குஜராத் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி மற்றும் மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் சூரத் நீதிமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்தது. சூரத் நீதிமன்றத்தில், ராகுல் காந்தி தனக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நீக்க கோரியும், வழக்கு நடைபெறும் வரையில் தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரியும் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம், ராகுல்காந்தி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் தற்போது ராகுல் காந்தி அவதூறு வழக்கில் சிறை தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை செசன்ஸ் நீதிமன்றம் நிராகரித்தற்கு எதிராக குஜராத் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணை ஏப்ரல் 29-ஆம் தேதி நடைபெறும் என குஜராத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu