தமிழகத்தில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக மூன்று நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடை காலம் முடிந்து இருந்தாலும் அதன் தாக்கம் இருந்து வருகிறது.சில இடங்களில் மழை பெய்தாலும் பல இடங்களில் வெயில் சுட்டெரிகின்றன. இந்த நிலையில் தற்போது கடந்த இரண்டு தினங்களாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக மூன்று நாட்களுக்கு கனத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதன்படி இன்று தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கோவை மாவட்டம் மலைப்பகுதிகள் ஆன தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே போல் அடுத்த இரு தினங்களுக்கு தமிழக மாவட்டங்களில் பல இடங்களில் மிதமான மற்றும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.