தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதிலும் வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக கரூர் பரமத்தியில் அதிகபட்சமாக 110.3 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. மேலும் ஈரோடு, திருச்சி, சேலம், திருத்தணி, திருப்பத்தூர், தர்மபுரி ,மதுரை, சேலம், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் 104,105 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் உள்ளது. இதில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், மாவட்டங்களில் ஒரு இடங்களில் நாளை கனமழை வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் நீலகிரி,கோவை,தேனி,திண்டுக்கல்,தென்காசி,திருநெல்வேலி பகுதிகளிலும் மழை வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது