தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை வாய்ப்பு

October 27, 2023

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.இதனால் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.இதனால் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கும் 28ஆம் தேதி கனமழை வாய்ப்பு இருப்பதாகவும், காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் 29ஆம் தேதி லேசான மழை பெய்யக்கூடும் எனவும், அதேபோல் தஞ்சாவூர், திருவாரூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட சில இடங்களில் கனமழைகள் வாய்ப்பிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. 30ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களில் மிதமான மழையும், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கின்றது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu