சீனாவில் கனமழை - 11 பேர் பலி

August 24, 2024

வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள ஹுலுடாங் நகரில் கடந்த வாரம் தொடங்கிய கனமழையால் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 14 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். கனமழையால் 100 கோடிக்கும் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நகரின் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில், தினசரி மழைப்பொழிவு 52.8 செ.மீ. என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. இது 1951ஆம் ஆண்டில் வானிலை பதிவுகள் தொடங்கிய பிறகு ஹுலுடாங் நகரில் பெய்த மிக […]

வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள ஹுலுடாங் நகரில் கடந்த வாரம் தொடங்கிய கனமழையால் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 14 பேர் காணாமல் போயுள்ளனர்.

அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். கனமழையால் 100 கோடிக்கும் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நகரின் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில், தினசரி மழைப்பொழிவு 52.8 செ.மீ. என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. இது 1951ஆம் ஆண்டில் வானிலை பதிவுகள் தொடங்கிய பிறகு ஹுலுடாங் நகரில் பெய்த மிக வலுவான மழையாகக் கூறப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களில் சீனாவில் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu