வங்கக்கடலில் நாளை ரீமால் புயல் உருவாக இருப்பதால் 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுத, வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று காலை தாழ்வு மண்டலமாக மேலும் பலமடைந்தது. இது 800 கிலோமீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது.மேலும் புய வலுவடைந்து வங்கக்கடலில் புயலாக உருவாக உள்ளது. இதனை தொடர்ந்து புயலாக வலுவடையும் தீவிர புயல் ஆனது மேற்கு வங்காள கடற்கரையை ஒட்டிய சாகர் தீவு மற்றும் கிவி பராவிற்கு இடையே நாளை மறுநாள் நள்ளிரவு கரையை கடக்க உள்ளது. இதன் தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, மதுரை, விருதுநகர்,திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது