தூத்துக்குடி மாவட்டத்திற்கு 30 மற்றும் 31ஆம் தேதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டு காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு 30 மற்றும் 31ம் ஆகிய இரு தேதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.