தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவி வரும் சூறாவளி சுழற்சி காரணமாக கேரளாவிற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவி வரும் சூறாவளி சுழற்சி காரணமாக கேரளாவில் கனமழை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது திருவனந்தபுரம் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கும், மேலும் இடுக்கி,பாலக்காடு, மலப்புறம் கோழிக்கோடு,வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கும் நாளை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கேரள கடற்கரையோரங்களில் இன்று 0.6 முதல் 1.5 மீட்டர் உயரம் வரை அலைகள் எழுவதற்கு வாய்ப்பிருப்பதாக தேசிய கடல்சார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.














