கேரளாவில் 22 ஆம் தேதி வரை அதிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் மே 22 ஆம் தேதி வரை அதிக கன மழை வாய்ப்பு இருப்பதாக வானிலை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பட்டினம் திட்டா, கோட்டயம், இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தற்போது திருவனந்தபுரம் கடும் மழை காரணமாக வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. இதனை அடுத்து இடுக்கி மாவட்டத்தில் மழை பகுதிகளில் வாகனங்கள் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர் மழையின் காரணமாக பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது